மதுரை அழகர்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு சுந்தரராஜபெருமாள் உலக மக்களுக்கு நலன் வழங்கும் விதமாக சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்
பக்தர்கள் வெகு நேரமாக காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்
சமூக இடைவெளி கடைபிடிக்காமல் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
கண்டு கொள்ளாத கோயில் நிர்வாகம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்து பெருமாளை தரிசித்து சென்றனர்
ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 3 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை பகல்பத்து இராப்பத்து வைபவங்கள் ஆலயத்தில் நடைபெறுகின்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் கள்ளழகர் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து சொர்க்கவாசல்திறப்பையொட்டி சுவாமி புறப்பாடு ஆகி ஆலயத்தில் உட்புறகாரத்தில் வலம் வந்து வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க சொர்க்காவசல் வழியாக கள்ளழகர் வந்து அங்குள்ள சயண மண்டபத்தை சுற்றி வலம் வந்து அங்கே உள்ள வைகுண்ட ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பன்னிருவாழ்வார்களால் மங்காளாசசனம் செய்யப்பட்ட நாலாயிர திவ்யபிரபந்தம் பாசுரங்கள் ஓதப்பட்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று முதல் ஆலயத்தில் இராப்பத்து விழா அடுத்த பத்து நாட்கள் நடைபெறுகின்றது. அதற்கு முன்னதாக இன்று சுந்தரராச பெருமாள் சேஷ வாகனத்தில். எழுந்தருளியதைக் காண பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்
الفئة
عرض المزيد
تعليقات - 0
مقاطع الفيديو ذات الصلة على ALAGAR KOYIL PERUMAL SESA VAGANATHIL: