மதுரை ஆண்டார் கொட்டாரத்தில் 3 அவுன்ஸ் மதுவுக்காக மைத்துனரை கத்தியால் குத்தி கொலை
சகோதரியின் கணவர் கைது
மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகா கருப்பாயூரணி அருகில் ஆண்டார் கொட்டாரம், கொண்டபெத்தான் காலனி யில்
திருநெல்வேலி மாவட்டத்தினைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஈஸ்வரன் (22) என்பவரை ஆண்டார் கொட்டாரம் கொண்ட பத்தான் காலனியைச் சேர்ந்த மதுரை வீரன் 42 என்பவர் முதுகில் கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் பலி
உறவினர்கள் இருவரும் மது அருந்தும்பொழுது 3 அவுன்ஸ் மட்டும் மீதம் இருந்துள்ளது இதனை குடித்த அக்காள் மாப்பிள்ளையை ஏன் 3 அவுன்ஸ் மதுவை குடித்தாய் என்று கேட்டுள்ளார் அதற்க்கு அப்படி தான் குடிப்பேன் என்று கூறியதால் தகராறு ஏற்ப்பட்டு, அக்காள் மாப்பிள்ளை மீது முதுகுல் கத்தியால் குத்தியுள்ளார் அப்பொழுது அந்த கத்தி இருதய பகுதியில் குத்தியதால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் 3 அவுன்ஸ்க்காக இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் மிகுந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது
தகவலறிந்த
சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து பிரேத உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்து கொலை குறித்த காரணங்களை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
الفئة
عرض المزيد
تعليقات - 0
مقاطع الفيديو ذات الصلة على மூன்றறை அவுன்ஸ் மதுவுக்காக மைத்துனரை கொலை செய்த சகோதரியின் கணவர்: